வணக்கம் நண்பர்களே,
இப்பதிவில் என்னிடம் இருக்கும் தமிழ் நாவல்கள் குறித்து ஒரு பார்வை.
நான் படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் தான்.பின்னால் ஒரு சமயத்தில் என்னக்கு பல புத்தகங்களை அறிமுகபடுத்தியது ரங்கா புக் ஸ்டாலை சேர்ந்த ரங்கநாதன் அண்ணா தான்.
முதலில் ராஜேஷ் குமார், சுபா நாவல்கள் பின்னர் சாண்டில்யன் கல்கி கதைகள் என என்னை பல திசைகளில் பயணிக்கக்க வைத்தது அவர் தான். இச்சமயத்தில் அவருக்கு எனது நன்றிகளை கூறிக் கொள்கிறேன்.
எனக்கு நாவல்களில் பிடித்தது துப்பறியும் மற்றும் ராணுவ நாவல்கள் தான்.அதில் எனக்கு முதலில் அறிமுகம் ஆனது ராஜேஷ் குமார் நாவல்கள் தான்.
அடுத்து அப்படியே மற்றவர்களது நாவல்கள் படிக்க ஆரம்பித்தேன். எனக்கு மிகவும் பிடித்தது சுபா நாவல்கள் தான்.
அனைத்து ஆசிரியர்களுமே தங்களுக்கு என பிரத்யேகமாக ஒரு ஹீரோ ஹீரோயின் வைத்துக்கொள்கின்றனர்.
அது போல அனைத்து ஆசிரியர்களுமே தனக்கு என ஒரு புத்தகம் வைத்திருப்பார்கள். அதில் அவரது கதைகள் மட்டுமே வரும். அவ்வகையில்
ராஜேஷ் குமார் : க்ரைம் நாவல்கள்.
சுபா : சூப்பர் நாவல்கள்
பட்டுக்கோட்டை பிரபாகர் : எ நாவல் டைம்.
தேவிபாலா : டெவில்
புஷ்பா தங்கதுரை : உதாப்பூ
ராஜேந்திரகுமார் : கோஸ்ட்
அது தவிர பல பொதுவான நாவல்களும் உள்ளன.
பெரும்பாலான ராஜேஸ்குமார் கதைகளில் வருபவர் க்ரைம் பிரான்சை சேர்ந்த விவேக் தான். அவருடன் வருபவர் கோகுல்நாத் என்ற இன்ஸ்பெக்டர். பின்னர் மற்ற ஆசிரியர்கள் உருவாகியதை பார்த்து ரூபலா என்ற பெண் கதாபாத்திரத்தை உருவாக்கினார். பின்னர் அவரது உதவியாளராக விஷ்ணு என்ற கதாபாத்திரத்தையும் உருவாக்கினார்.
ஆக இந்த 4 கதாபாத்திரங்கள் தான் பெரும்பாலும் வருவார்கள்.
நான் கடைக்கு சென்று க்ரைம் நாவலில் விவேக் இருக்கிறாரா என்று பார்த்தே வாங்குவேன்.
ராஜேஷ் குமார் கோவை மாநகரத்தை சேர்ந்தவர் என்பதால் பெரும்பாலும் அவர் கதை நிகழும் களம் கோவையாகவே இருக்கும்.
 |
| பழைய க்ரைம் நாவல்களில் சில |
 |
| மொத்த க்ரைம் நாவல்கள் |
ஒருமுறை ராஜேஷ்குமார் அவர்கள் நமது சூப்பர் ஸ்டார் ரஜினி துப்பறிவது போல பல சிறுகதைகள் சேர்ந்த புத்தகம் ஒன்றை கொடுத்தார்.
முதலில் மிகவும் பிடித்திருந்த இவரது நாவல்கள் பின்னைய காலங்களில் வந்த கதைகளால் போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது.
 |
| சூப்பர் ஸ்டார் ரஜினி துப்பறியும் நாவல்கள் |
அடுத்து சுபா, சுரேஷ் மற்றும் பால கிருஷ்ணன் என இருவர் சேர்ந்து எழுதும் கதைகள். அவர்களது ஆரம்பகால சூப்பர் நாவல்களின் அட்டைபடங்களுக்கு புகைப்படம் எடுத்தவர் நமது கேமராமேன் / டைரெக்டர் கே.வி.ஆனந்த் அவர்கள் எனபது கொசுறு செய்தி.
ஒரு சில புகைப்படங்கள் கீழே.
 |
| சில பழைய சூப்பர் நாவல்கள் |
இவரது பெரும்பாலான கதைகளில் நாயகன் நாயகியாக வருவது நரேன்(நரேந்திரன்) & வைஜ் (வைஜெயிந்தி) தான் இருவரும் Eagle's என்ற தனியார் துப்பறியும் நிறுவனத்தை சேர்ந்தவர்கள். அதன் நிறுவனர் ஒரு முன்னாள் மேஜர். பின்னர் மற்றும் ஒரு ஜோடியை உருவாக்கினார் அவர்கள் தான் ஜான் சுந்தர் மற்றும் அனிதா. இவர்களுடன் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வருவார் அவர் பெயர் பால்ராஜ்.
சுபா அவர்கள் உருவாகிய மற்றொரு வித்தியாசமான ஜோடி தான் செல்வா மற்றும் முருகேசன். செல்வா ஒரு முன்னாள் ராணுவ வீரர் முருகேசன் சென்னை சேரியை சேர்ந்தவர். கதைகளில் பெரும்பாலும் செல்வா எதாவது சிக்கலில் மாட்டிக்கொள்வார் பின்னர் முருகேசன் அவரை காப்பாற்றுவார். கதைகள் அனைத்தும் காமெடி நிறைந்தவை. அதில் வரும் சென்னை தமிழ் சொற்களும் நன்றாக இருக்கும்.
 |
| மொத்த சுபா நாவல்கள் |
பட்டுக்கோட்டை பிராபகர் உருவாக்கியவர்கள் தான் பரத் மற்றும் சுசீலா.
இவர்களது துப்பறியும் நிறுவனத்தின் பெயர் நினைவில் இல்லை. இவர்கதைகளில் பிரபாலமானது ஒவ்வொரு கதைகளிலும் சுசீலா போட்டுகொண்டு வரும் டி ஷர்டுகள் தான், அதில் இருக்கும் வித்தியாசமான ஆங்கில வாசகங்கள் தான்.
அவர் எழுதிய பிருந்தாவனமும் நொந்த குமாரனும் என்ற நகைச்சுவை கதை எனக்கு மிகவும் பிடிக்கும்.
சுபா மற்றும் PKP இருவரும் சேர்ந்து ஒரு கதை எழுதினார்கள். அதில் நரேன் - வைஜ் & பரத் - சுசீலா நான்கு பேருமே வருவார்கள்.
உங்கள் ஜூனியரில் வந்தது எனநினைக்கிறேன், கதையின் பெயர் கூட தங்க தாமரை என்று நினைக்கிறன். எப்படி மிஸ் செய்தேன் என தெரியவில்லை.
தேவிபாலா அவர்கள் எழுதும் துப்பறியும் கதைகளில் வருபவர்கள் தான் பிரசன்னா மற்றும் லதா. அவர் எழுதிய குடும்ப கதைகள் எதுவும் படித்தது இல்லை.
ராஜேந்திரகுமார் கதைகளில் வருபவர்கள் தான் ராஜாவும் ஜென்னியும்.
ஆர்னிகா நாசர் அவர்கள் நாவல்கள் பெரும்பாலும் அமாநிசியங்கள் நிறைந்தாக இருக்கும். அவர் கதைகளில் வருபவர்கள் டியாரவும் தேஜச்வினியும்.
இவ்வாறு துப்பறியும் கதைகளுக்கெல்லாம் மூலமாக நான் நினைப்பது சுஜாதா அவர்களின் கணேஷ் வசந்தும் தமிழ்வாணன் அவர்களின் சங்கர்லாலும் தான் எனபது எனது கருத்து.
அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.