பூந்தளிர் கதைகள் : 2

பூந்தளிர் கதைகள் : 2

இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் - ஒரு பார்வை

இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் - ஒரு பார்வை

தமிழ் நாவல்கள் - ஒரு பார்வை.

தமிழ் நாவல்கள் - ஒரு பார்வை

0 JACK THE GIANT SLAYER - Movie Review;

JACK THE GIANT SLAYER - Movie Review

பூந்தளிர்

பூந்தளிர் கதைகள் : 1

Tuesday, April 16, 2013

புஷ்பா தங்கதுரை & ராஜேந்திரகுமார் நாவல்கள்

வணக்கம் நண்பர்களே,

எனது நாவல்கள் தொகுப்பின் வரிசையில் இந்த பதிவில் என்னிடம் இருக்கும் புஷ்பா தங்கதுரை மற்றும் ராஜேந்திரகுமார் அவர்களின் நாவல்களின் ஒரு சில அட்டை படங்கள் உங்கள் பார்வைக்கு.

புஷ்பா தங்கதுரை யின் கதைகள் பெரும்பாலும் ஊதாப்பு என்ற புத்தகத்திலேயே வந்துள்ளன. அவரது கதைகளில் பெரும்பாலும் சிங் என்ற இன்ஸ்பெக்டர் வருவார், மற்றும் கட்டாயம் ஒரு கிளுகிளுப்பு காட்சி இருக்கும்.

கதைகளில் வரும் பெயர்களும் பழங்கால பெயர்களாக இருக்கும்.

அவர் க்ரைம் தவிர பிற வகைகளிலும் கதைகள் எழுதியுள்ளார். குழந்தைகளுக்காக சிறுவர்கள் துப்பறியும் கதைகள் லிட்டில் புஷ்பா என்ற புத்தகத்தில் வந்துள்ளன. மொத்தமாக எவ்வளவு வந்துள்ளன என்று தெரியவில்லை ஆனால் வந்த முதல் புத்தகத்தின் அட்டைபடம் கீழே.

அது தவிர ஸ்ரீ வேணுகோபாலன் என்ற பெயரில் இறை சார்ந்த கதைகளும் எழுதிஉள்ளார். அதில் மிகவும் புகழ் வாய்ந்த கதை திருவரங்கன் உலா. நான் படித்ததில்லை ஆனால் கதையில் ஒரு திருமால் சிலை பல ஊர்கள் பயணம் செய்யும்.

சிறுவர்களுக்கான கதை 

ராணி முத்துவில் வந்த கதைகள்

அவரது புகைப்படம்

ஊதாப்பூ 


ஊதாப்பூ 


மொத்த புத்தகங்கள் 

பிற புத்தகங்களில் வந்த கதைகள் 
ராணி முத்துவில் எனக்கு தெரிந்து எழுதாத எழுத்தாளர்களே இல்லை எனலாம். ஆனால் அவர்கள் பெரிய சாண்டில்யன் கதைகளை எடிட் செய்து வெளியிட்டது பெரிய கொடுமையாக இருக்கும். கதையே புரியாது.

ராணி முத்துவில் வந்த சில அறிய கதைகள் 


அதே போல ஆவி அமானுஷ்யம் சார்ந்த கதைகள் எழுதுவதில் வல்லவர் ராஜேந்திரகுமார். அவரது துப்பறியும் கதைகளில் பெரும்பாலும் ராஜா ஜென்னி என்ற ஜோடி இருக்கும். அவர்களே துப்பு துலக்குவார்கள்.

எனது முன்னைய பதிவில் கூறி இருந்தது போல அவரது கதைகள் கோஸ்ட் என்ற புத்தகத்தில் தொடர்ந்து வந்தன.






ராணி முத்துவில் வந்த கதைகள் 
பாக்கெட் நாவலில் வந்த சில அறிய கதைகள்.



அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ .

Tuesday, April 2, 2013

பூந்தளிர் கதைகள் : 2


வணக்கம் நண்பர்களே,

பூந்தளிர் கதைகளின் தொகுப்பில் எனது இரண்டாவது பதிவு.

முதல் பதிவை படிக்க க்ளிக் செய்யவும்.

இன்றைய தினம் புத்தக தினம். நாம் அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். மேலும் குழந்தைகளுக்கும் பழக்கப் படுத்தவேண்டும். அதற்கு ஒரு சிறந்த வழியாக பூந்தளிர் இருக்கும்.

பூந்தளிர் பெரும்பாலும் ஆனந்த் பை அவர்களின் கதைகளையே கொண்டிருக்கும். மேலும் சில வாண்டுமாமா அவர்களின் தொடர்கதைகளும் இருக்கும்.


தேவியின் அருள் :

முதல் கதை தேவியின் அருள். சந்திராபூர் என்ற நாட்டில் சயான்பூர் என்ற சோம்பேறிகள் நிறைந்த கிராமம் இருக்கிறது. மன்னர் அந்த சோம்பேறிகளை சுறுசுறுப்பு ஆக்குவபவர்களுக்கு பரிசு என்று அறிவிக்கிறார்.

உடனே லக்ஷ்மன் என்ற நிதி அதிகாரி அந்த சவாலை ஏற்று எவ்வாறு  அவர்களை சுறுசுறுப்பு ஆக்குகிறார் என்பதே கதை.




கபீஷ் :

இரண்டாவது கதை கபீஷினுடயது. தோப்பையா ஒரு தம்பதியினருடன் மான் பிந்துவை பிடிக்க வருகிறான். ஆனால் கபீஷ் அதனை எச்சரிக்க, அது தப்பி விடுகிறது.

அதே போல அங்கு வரும் யானை கூட்டத்தையும் கபீஷ் தனது தந்திரத்தால் காப்பாற்றுகிறது.



வேட்டை கார வேம்பு :

வழக்கம் போல தனது அதிர்ஷ்டத்தால் ஒரு மிருக காட்சி சாலைக்கு மலை பாம்பு ஒன்றை பிடித்து தருகிறார்.

மந்திரியின் தந்திரம் :

மந்திரி ஒரு கொசு அடிக்கும் குரங்கு மூலம் ராஜாவை மயக்க வைத்து ஆட்சியை பிடிக்க நினைக்கிறார். வழக்கம் போல அது அவர் தலையிலேயே வந்து விடிகிறது.



இப்பதிவின் புகைப்படங்களை நமக்காக மேம்படுத்திக் கொடுத்ததற்கு நண்பர் சௌந்தர் அவர்களுக்கு நன்றி.

 இந்த பதிவு உங்களையும் உங்கள் வீட்டு சுட்டிகளையும் சந்தோஷப் படித்தினால் மகிழ்வேன்.

அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வே.

Tuesday, March 26, 2013

இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் - ஒரு பார்வை.

வணக்கம் நண்பர்களே,

எனது போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவில் என்னிடம் இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பற்றி பார்க்க போகிறோம்.

என்னுடைய பள்ளிகாலத்தில் எனக்கு இரு நண்பர்கள் இருந்தார்கள். நல்ல தம்பி மற்றும் விவேக்.  இருவரும் தினமும் தொலைகாட்சியில் வரும் ரகசியம் என்ற தொலைக்காட்சி தொடர் பற்றி அதிகமாக விவாதம்  செய்வார்கள். எனது வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லாததால் எனக்கு அதனை பற்றி தெரியாது. ஆனால் அவர்கள் கூறியதில் இருந்தே அத்தொடர் மீது ஒரு ஈர்ப்பு வந்தது.

அத்தொடர் முடிந்ததும் அடுத்து மர்ம தேசத்தில் வந்த தொடர் தான் விடாது கருப்பு. கருப்பு வெள்ளை மற்றும் கலரில் என பயணிக்கும் தொடர். பார்க்கும் அனைவரையும் ஈர்த்த தொடர்.அமானுஷ்யம்,சஸ்பென்ஸ் தொடர்களுக்கேலாம் ஒரு டிரெண்ட் செட்டெராக இருந்தது. அதனை நாகா நன்றாக இயக்கி இருப்பார்.

அத்தொடர் மூலம் தான் இந்திரா சௌந்தர்ராஜன் அறிமுகம் ஆனார். எனக்கு பொதுவாகவே சித்தர்கள் மற்றும் மித்தாலஜி பிடிக்கும். ஆகையால் இவரது கதைகள் மிகவும் பிடித்து போனது.

அவரது உச்சகாலத்தில் மாதம் பல நாவல்கள் அவரது கதைகளை தாங்கி வந்தன. க்ரைம் ஸ்டோரி,டுடே க்ரைம்,பாக்கெட் நாவல் என்று பல புத்தகங்கள் வந்தன.

க்ரைம் ஸ்டோரி மற்றும் டுடே க்ரைம் இரண்டிலும் முன்பு தொடராக வந்த கதைகளை பாகங்களாக வெளியிட்டனர்.

பாக்கெட் நாவல் புத்தகத்தில் அவரது பல புதிய கதைகள் வந்தன. அவரது கதையில் வரும் பொதிகை மலைக்கு போக பல நாள் ஆசைபட்டுளேன்.
அது போல அவரது கதையில் வரும் சித்தர்களை காண விரும்பினேன்.

அவரது அஷ்டமா சக்தி பற்றிய கதை தொடர் நன்றாக இருக்கும். ஒவ்வொரு சக்திக்கும் ஒரு கதை என்று கொடுத்திருப்பார்.

அது போல கன்னிகள் ஏழுபேர் என்ற கதை தொடரில் சப்த கன்னிகள் பற்றி கூறி இருப்பார்.

பாக்கெட் நாவலில் வந்த விக்ரமா விக்ரமா என்ற கதை தொடரில் விக்கிரமாதித்தனின் கதையா வித்தியாசமாக கொடுத்திருப்பார். கதையின் முடிவு மட்டும் மொக்கையாக இருக்கும். அனைத்தும் கனவு என்று முடித்திருப்பார்.

தொலைகாட்சியில் வந்து வெற்றி பெற்ற ருத்ரவீணை தொடரை நாவல் வடிவில் கொண்டு வந்தார். நாவலின் முடிவை மட்டும் தொலைகாட்சின் முடிவில் இருந்து வேறு படுத்தி காட்டி இருப்பார்.

அதே போல சிவமயம் தொடரும் நன்றாக இருக்கும்.

அவரது பல கதைகள் தொலைகாட்சியில் வெற்றி பெற்றுள்ளன. ரகசியம், விடாது கருப்பு, சொர்ண ரேகை, எதுவும் நடக்கும், ருத்திர வீணை, சிவமயம், கோட்டையபுறத்து வீடு ஆகியவை சில.

ஒவ்வொரு கதையிலும் அந்த அத்தியாயம் ஆரபிக்கும் முன் ஒரு சிறு குறிப்பு இருக்கும் அது மிக நன்றாக இருக்கும்.

கருப்பை பற்றிய குறிப்பு, ஒரு ராகத்தை பற்றிய குறிப்பு அல்லது அஷ்டமா சக்தியை பற்றியது. இப்படி எதாவது ஒரு குறிப்பு இருக்கும்.










தொடர்ந்து வரும் பதிவில் என்னிடம் இருக்கும் புஷ்பா தங்கதுரை மற்றும் ராஜேந்திர குமார் அவர்களின் கதை தொகுப்பை பார்க்கலாம்.

அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.

தமிழ் நாவல்கள் (என்னிடம் இருக்கும்) - ஒரு பார்வை.

வணக்கம் நண்பர்களே,

இப்பதிவில் என்னிடம் இருக்கும் தமிழ் நாவல்கள் குறித்து ஒரு பார்வை.
நான் படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் தான்.பின்னால் ஒரு சமயத்தில் என்னக்கு பல புத்தகங்களை அறிமுகபடுத்தியது ரங்கா புக் ஸ்டாலை சேர்ந்த ரங்கநாதன் அண்ணா தான்.

முதலில் ராஜேஷ் குமார், சுபா நாவல்கள் பின்னர் சாண்டில்யன் கல்கி கதைகள் என என்னை பல திசைகளில் பயணிக்கக்க வைத்தது அவர் தான். இச்சமயத்தில் அவருக்கு எனது நன்றிகளை கூறிக் கொள்கிறேன்.

எனக்கு நாவல்களில் பிடித்தது துப்பறியும் மற்றும் ராணுவ நாவல்கள் தான்.அதில் எனக்கு முதலில் அறிமுகம் ஆனது ராஜேஷ் குமார் நாவல்கள் தான்.

அடுத்து அப்படியே மற்றவர்களது நாவல்கள் படிக்க ஆரம்பித்தேன். எனக்கு மிகவும் பிடித்தது சுபா நாவல்கள் தான்.

அனைத்து ஆசிரியர்களுமே தங்களுக்கு என பிரத்யேகமாக ஒரு ஹீரோ ஹீரோயின் வைத்துக்கொள்கின்றனர். 

அது போல அனைத்து ஆசிரியர்களுமே தனக்கு என ஒரு புத்தகம் வைத்திருப்பார்கள். அதில் அவரது கதைகள் மட்டுமே வரும். அவ்வகையில்

ராஜேஷ் குமார் : க்ரைம் நாவல்கள்.
சுபா : சூப்பர் நாவல்கள்
பட்டுக்கோட்டை பிரபாகர் : எ நாவல் டைம்.
தேவிபாலா : டெவில்
புஷ்பா தங்கதுரை : உதாப்பூ
ராஜேந்திரகுமார் : கோஸ்ட்

அது தவிர பல பொதுவான நாவல்களும் உள்ளன.

பெரும்பாலான ராஜேஸ்குமார் கதைகளில் வருபவர் க்ரைம் பிரான்சை சேர்ந்த விவேக் தான். அவருடன் வருபவர் கோகுல்நாத் என்ற இன்ஸ்பெக்டர். பின்னர் மற்ற ஆசிரியர்கள் உருவாகியதை பார்த்து ரூபலா என்ற பெண் கதாபாத்திரத்தை உருவாக்கினார். பின்னர் அவரது உதவியாளராக விஷ்ணு என்ற கதாபாத்திரத்தையும் உருவாக்கினார்.

ஆக இந்த 4 கதாபாத்திரங்கள் தான் பெரும்பாலும் வருவார்கள்.
நான் கடைக்கு சென்று க்ரைம் நாவலில் விவேக் இருக்கிறாரா என்று பார்த்தே வாங்குவேன்.

ராஜேஷ் குமார் கோவை மாநகரத்தை சேர்ந்தவர் என்பதால் பெரும்பாலும் அவர் கதை நிகழும் களம் கோவையாகவே இருக்கும்.


பழைய க்ரைம் நாவல்களில் சில


மொத்த க்ரைம் நாவல்கள்

ஒருமுறை ராஜேஷ்குமார் அவர்கள் நமது சூப்பர் ஸ்டார் ரஜினி துப்பறிவது போல பல சிறுகதைகள் சேர்ந்த புத்தகம் ஒன்றை கொடுத்தார்.

முதலில் மிகவும் பிடித்திருந்த இவரது நாவல்கள் பின்னைய காலங்களில் வந்த கதைகளால் போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினி துப்பறியும் நாவல்கள்
 அடுத்து சுபா, சுரேஷ் மற்றும் பால கிருஷ்ணன் என இருவர் சேர்ந்து எழுதும் கதைகள். அவர்களது ஆரம்பகால சூப்பர் நாவல்களின்  அட்டைபடங்களுக்கு புகைப்படம் எடுத்தவர் நமது கேமராமேன் / டைரெக்டர் கே.வி.ஆனந்த் அவர்கள் எனபது கொசுறு செய்தி.

ஒரு சில புகைப்படங்கள் கீழே.
 
சில பழைய சூப்பர் நாவல்கள்

இவரது பெரும்பாலான கதைகளில் நாயகன் நாயகியாக வருவது நரேன்(நரேந்திரன்) & வைஜ் (வைஜெயிந்தி) தான் இருவரும் Eagle's  என்ற தனியார் துப்பறியும் நிறுவனத்தை சேர்ந்தவர்கள். அதன் நிறுவனர் ஒரு முன்னாள் மேஜர்.  பின்னர் மற்றும் ஒரு ஜோடியை உருவாக்கினார் அவர்கள் தான் ஜான் சுந்தர் மற்றும் அனிதா. இவர்களுடன் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வருவார் அவர் பெயர் பால்ராஜ்.

சுபா அவர்கள் உருவாகிய மற்றொரு வித்தியாசமான ஜோடி தான் செல்வா மற்றும் முருகேசன். செல்வா ஒரு முன்னாள் ராணுவ வீரர் முருகேசன் சென்னை சேரியை சேர்ந்தவர். கதைகளில் பெரும்பாலும் செல்வா எதாவது சிக்கலில் மாட்டிக்கொள்வார் பின்னர் முருகேசன் அவரை காப்பாற்றுவார். கதைகள் அனைத்தும் காமெடி நிறைந்தவை. அதில் வரும் சென்னை தமிழ் சொற்களும் நன்றாக இருக்கும்.


 மொத்த சுபா நாவல்கள்

பட்டுக்கோட்டை பிராபகர் உருவாக்கியவர்கள் தான் பரத் மற்றும் சுசீலா.
இவர்களது துப்பறியும் நிறுவனத்தின் பெயர் நினைவில் இல்லை. இவர்கதைகளில் பிரபாலமானது ஒவ்வொரு கதைகளிலும் சுசீலா போட்டுகொண்டு வரும் டி ஷர்டுகள் தான், அதில் இருக்கும் வித்தியாசமான ஆங்கில வாசகங்கள் தான்.

அவர் எழுதிய பிருந்தாவனமும் நொந்த குமாரனும் என்ற நகைச்சுவை கதை எனக்கு மிகவும் பிடிக்கும்.



சுபா மற்றும் PKP இருவரும் சேர்ந்து ஒரு கதை எழுதினார்கள். அதில் நரேன் - வைஜ் & பரத் - சுசீலா நான்கு பேருமே வருவார்கள்.

உங்கள் ஜூனியரில் வந்தது எனநினைக்கிறேன், கதையின் பெயர் கூட தங்க தாமரை என்று நினைக்கிறன். எப்படி மிஸ் செய்தேன் என தெரியவில்லை.

தேவிபாலா அவர்கள் எழுதும் துப்பறியும் கதைகளில் வருபவர்கள் தான் பிரசன்னா மற்றும் லதா. அவர் எழுதிய குடும்ப கதைகள் எதுவும் படித்தது இல்லை.



ராஜேந்திரகுமார் கதைகளில் வருபவர்கள் தான் ராஜாவும் ஜென்னியும்.


ஆர்னிகா நாசர் அவர்கள் நாவல்கள் பெரும்பாலும் அமாநிசியங்கள் நிறைந்தாக இருக்கும். அவர் கதைகளில் வருபவர்கள் டியாரவும் தேஜச்வினியும்.



இவ்வாறு துப்பறியும் கதைகளுக்கெல்லாம் மூலமாக நான் நினைப்பது சுஜாதா அவர்களின் கணேஷ் வசந்தும் தமிழ்வாணன் அவர்களின் சங்கர்லாலும் தான் எனபது எனது கருத்து.

அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.

Monday, March 11, 2013

JACK THE GIANT SLAYER - Movie Review




வணக்கம் நண்பர்களே,

நீண்ட நெடு நாட்களுக்கு பிறகு ஒரு பதிவுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பலகாலங்களாக பழைய தேவதைகதைகளை திரைப்படம் ஆக்குவதில் முனைப்பாக இருக்கிறது ஹாலிவுட். அதில் பல படங்கள் வெற்றி அடைந்திருக்கின்றன.

சமீபகாலமாக மீண்டும் பழைய தேவதைகதைகளை தொழில் நுட்ப உதவியுடன் சிறிது கதையிலும் கவனம் செலுத்தி எடுத்து வருகிறது.

அதற்கு எடுத்துக்காட்டுதான் சமீபத்தில் வந்த Hansel & Grantel மற்றும் கடந்த வாரம் வெளியாகி உள்ள Jack The Giant Slayer திரைப்படங்கள்.

இரண்டு படங்களுமே தொழில் நுட்பத்தின் அபரீத வளர்ச்சியால் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கதையிலும் சற்று கவனம் செலுத்தி உள்ளார்கள்.

 நான் பார்த்த Jack The Giant Slayer படத்தை பற்றிய எனது கருத்து மற்றும் கதையே இந்த பதிவு.

கதை :



நமக்கு (எனக்கு) ஓரளவே தெரிந்த கதை.

ஜாக் என்ற விவசாய சிறுவனுக்கு அவன் தந்தையும் மற்றும் இசபெல் என்ற இளவரசிக்கு அவள் தாயும் அக்கதையை கூறுகிறார்கள்.

பல வருடங்களுக்கு முன் அந்த நாட்டை எரிக் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அப்பொழுது சில சாமியார்கள் ஒரு சில பீன் விதைகளை கண்டுபிடித்தார்கள். அது ஒரு விஷேசமானது. அதனை விதைத்தால் பெரிய கொடி வளரும்.

அதன் மூலம் சாமியார்கள் உயிருடன் சொர்கத்தை அடைய நினைத்தார்கள். ஆகையால் அந்த விதைகளில் ஒன்றை பூமியில் விதைத்து அதன் மூலம் வளர்ந்த கொடியில் ஏறி சுவர்க்கம் நோக்கி சென்றார்கள்.

வழியில் ஒரு இடத்தில் ஒரு நிலப்பரப்பை காண்கிறார்கள். அதுதான் சுவர்க்கம் என தப்பாக நினைக்கும் அவர்கள் அங்கு இறங்குகிறார்கள்.
ஆனால் அங்கு வாழும் ராட்சதர்களிடம் மாட்டி உயிர் விடுகிறார்கள். அவர்கள் வந்த கொடியை கண்டுபிடிக்கும் ராட்சதர்கள் அதன் மூலம் பூமிக்கு வந்து அட்டூழியம் புரிகிறார்கள்.

அவர்களை மன்னர் எரிக் ஒரு கிரீடம் செய்து கட்டுப்படுத்துகிறார்.
அதன் மூலம் அவர்களை அவர்களது இடத்திற்கு அனுப்பிவிட்டு அந்த கொடியை வெட்டி விடுகிறார். அதன் மூலம் நாட்டில் அமைதி திரும்புகிறது.

மேலே போன ராட்சதர்கள் தகுந்த நேரத்திற்காக காத்திருகின்றனர். மன்னர் எரிக் இறந்த பின் அந்த பீன்களும் கிரீடமும் அவருடன் சேர்த்து புதைக்க படுகிறது. இப்படியாக கதை முடிகிறது. இதனை பலர் கற்பனை என்றும் சிலர் உண்மை என்றும் நினைக்கின்றனர்.

பத்து வருடங்களுக்கு பிறகு இருவரும் வளர்ந்துவிடுகிறார்கள்.



ஜாக்



இசபெல்

வழக்கம் போல அந்த நாட்டு மன்னர் தனது மகளை வில்லனுக்கு கட்டி கொடுத்து அந்த நாட்டு மன்னர் ஆக்க நினைக்கிறார்.



வில்லன் மற்றும் அவன் கூட்டாளி

ஆனால் வில்லனோ இறந்த மன்னர் எரிக்கின் சமாதியில் இருந்து அந்த பீன்களையும் கிரீடத்தையும் ஒரு திட்டத்தோடு திருடி வைத்திருகிறான்.

இதனை அறிந்த சாமியார்கள் ஒரு சாமியார் மூலம் அதனை திருடி வர அனுப்புகின்றனர். அவர் அந்த பீன்களை மட்டும் திருடுகிறார். அனால் தப்பி செல்வதற்கு முன் மாட்டிக்கொண்டு விடுகிறார்.

எதிர்பாரதவிதமாக அந்த பீன்கள் நம்ம ஹீரோவிடம் வந்து சேர. அதனை கொண்டு வீட்டிற்கு வருகிறான். அங்கு அவன் வைத்திருக்கும் பீன்களில் ஒன்று தவறி கீழே விழுகிறது. கல்யாணம் பிடிக்காமல் தப்பி செல்லும் இளவரசி நேரே நம்ம ஹீரோ வீட்டிற்கு வருகிறாள்

மழை பெய்கிறது. அதன் மூலம் கீழே விழுந்த பீனில் இருந்து பெரிய கொடி வளர்கிறது. அது அந்த வீட்டை அப்படியே தூக்கிக்கொண்டு வானை நோக்கி வளர்கிறது.



வீட்டை அப்படியே தூக்கி செல்லும் காட்சி.
மேலே செல்லும் இளவரசி அங்கு வாழும் ராட்சர்களிடம் மாட்டிக்கொள்கிறாள்.  அவளை காப்பாற்ற நமது ஹீரோவும் சில வீரர்கள் குழுவும் செல்கிறது. கூடவே வில்லனும் அவனது கூட்டாளியும் சேர்ந்து கொள்கிறார்கள்.

தளபதி மற்றும் அவர் உதவியாளர்.

வழியிலேயே வில்லன் வீரர்களில் பெரும்பாலோனோரை கொன்று விடுகிறான். மேலே செல்லும் மீதம்  இருந்த ஜாக், தளபதி மற்றும் அவர் உதவியாளர் மற்றும் வில்லன் அவனது கூட்டாளி
பிரிந்து சென்று தேடுகிறார்கள்.

அதில் தளபதி ராட்சர்களிடம் சிக்கி கொள்கிறார்.


தளபதியின் உதவியாளர் ஒரு ராட்சதனிடம் மாட்டி உயிர்விடுகிறார்.




தளபதி மாட்டிகொள்கிறார்.



சமைப்பதர்க்கு தயாராக..


சமையல்காரன்.

வில்லன் தனது கிரீடத்தின் உதவியுடன் அந்த கூட்டத்தின் தலைவன் ஆகிறான். அதன் பின் அவர்கள் மூலம் பூமி நோக்கி படையெடுக்க முயற்சி செய்கிறான். அவனை எப்படி ஹீரோவும் தளபதியும் சேர்ந்து அந்த கிரீடத்தின் துணை கொண்டு அவர்களை மீண்டும் அடக்குகிறார் என்பதே கதை.


ராட்சதர்களின் இரட்டை தலை தலைவன்



கிரீடத்தின் துணை கொண்டு மன்னனான வில்லன்

பூமியை நோக்கி படை எடுக்க தயாராக இருக்கும் கூட்டம்.




இறுதி சண்ண்டைக்கு தயாராக.



ராட்சதர்களின் தலைவன் வீழ்த்தப்படுகிறான்.

மிகவும் சாதாரணமான கதை தான் ஆனால் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு ஈர்க்கும் விதத்தில் எடுத்துள்ளனர்.

படத்தின் பெரும் பலமே இறுதிக்காட்சி சண்டை தான். இளவரசியை காப்பாற்றி கீழே கொண்டு வந்ததும் அடடே இப்படி கதை சப்பென்று முடிந்து விட்டதே என நினைத்தேன் ஆனால்  ராட்சர்கள் மீண்டும் கீழே வந்து ஒரு பெரும் யுத்தம் நடக்கும் அது நன்றாக இருக்கும்.

படத்தில் எனக்கு சற்று பிடிக்காதது படத்தின் ஹீரோதான் முன்வழுக்கை தலையுடன் சற்று வயதானவராக தெரிகிறார் மற்றும் ஒரு ஹீரோவிறகான தேஜஸ் அவரிடம் இல்லை. அதற்கு படை தளபதியாக வருவபர் நன்றாக உள்ளார்.

மொத்தத்தில் படம் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.

அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.